சமீப காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க இருக்கும் நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
Enewz Tamil WhatsApp Channel
குறிப்பாக மழைநீர் வடிகால் வாய்க்கால் சீரமைப்பு, பழுதடைந்த கட்டிடங்களை கண்டறியப்பட்டு அப்புறப்படுத்துதல், சாலையில் மரம் விழுதல் மற்றும் பாலம் இடிந்து விழுந்தால் அதை அகற்றுதல், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுதல், நீர் வளத்துறையுடன் ஒருங்கிணைந்து நீச்சல் வீரர்கள் மற்றும் படகுகள் உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கண்ணாடி பாட்டில்களில் பால் விற்பனை – வலுக்கும் கோரிக்கை!