சினிமாவுக்காக பிள்ளையை பட்டினி போட்ட பாரதி ராஜா., தயாரிப்பாளர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!!

0
சினிமாவுக்காக பிள்ளையை பட்டினி போட்ட பாரதி ராஜா., தயாரிப்பாளர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!!
சினிமாவுக்காக பிள்ளையை பட்டினி போட்ட பாரதி ராஜா., தயாரிப்பாளர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!!

கோலிவுட் திரையில் எக்கசக்க வெற்றிப் படங்களை இயக்கி பிரபலமானவர் தான் இயக்குனர் பாரதி ராஜா. இவர் 16 வயதினிலே என்ற படத்தை இயக்கி சினிமாவுக்குள் அறிமுகப்படுத்தி கொண்டார். மேலும் இப்படத்தை பிரபல producer ராஜ் கண்ணு தயாரித்திருந்தார். இந்நிலையில் 2 தினங்களுக்கு முன் ராஜ் கண்ணு இறந்துள்ள நிலையில், பாரதிராஜாவுக்கு அவருக்கு இடையில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது 16 வயதினிலே படத்தை இயக்கும் போது பாரதிராஜாவின் மனைவி குடும்ப செலவுக்காக அவரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் படம் தயாரிப்பதற்காக ராஜ் கண்ணு கொடுத்த பணம் மட்டும் தான் பாரதிராஜாவிடம் இருந்துள்ளது. அதனால் இது முதலாளியின் பணம், இதை குடும்ப செல்வுக்காகவோ தன் பிள்ளைகளுக்காகவோ செலவிட கூடாதென இருந்துள்ளார். இதையறிந்த ராஜ் கண்ணு, பாரதி ராஜாவின் குடும்பத்திற்கு தேவையான பணத்தை கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here