இவர்களை எல்லாம் ஓமைக்ரான் பரவலாக தாக்குகிறது – உலக சுகாதார அமைப்பு தலைவர் அறிக்கை!!

0
இந்தியாவில் மெல்ல மெல்ல உயரும் பலி எண்ணிக்கை - பாதிப்பு நிலவரத்தை வெளியிட்ட மத்திய அரசு!

தற்போது பரவி வரும் ஓமைக்ரான் வைரஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களையும், நோயில் இருந்து மீண்டவர்களையும் பரவலாக தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உலக சுகாதார நிறுவனம் :

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன் பரவிய டெல்டா வகை உருமாறிய வைரஸ் தனது கோரத்தாண்டவத்தால் பல ஆயிரம் மக்களின் உயிரை பறித்தது. இது ஓரளவு கட்டுக்குள் வருவதற்கு முன்பே தற்போது தென் ஆப்பிரிக்காவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவ தொடங்கி விட்டது. இதை கட்டுப்படுத்த முடியாமல் பல்வேறு உலக நாடுகளும் திணறி வருகிறது.

தற்போது, உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸ் குறித்து முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. அதாவது, தற்போது பரவி வரும் இந்த ஓமைக்ரான் வைரஸ் டெல்டா வகை வைரஸை விட பல மடங்கு வேகமாக பரவ கூடியது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களையும், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களையும் இந்த வைரஸ் பரவலாக தாக்குகிறது என ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.

இதனால் தடுப்பூசி செலுத்தாதவர்கள் விரைந்து செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here