தலைநகரில் இரண்டே நாட்களில் 84 சதவீதம் பேருக்கு ஓமைக்ரான் – மாநில சுகாதாரத்துறை பரபரப்பு அறிக்கை!!

0

நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 82 சதவீதம் பேருக்கு ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

 பாதிப்பு உறுதி :

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால், 3ம் அலை தொடங்கி விட்டதாக உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி, கோவா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களில் கொரோனா பாதித்தவர்களில்  84% பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 350 நபர்களுக்கு புதிய வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில், இன்று மட்டும் சுமார் 4,000 பேருக்கு பாதிப்பு ஏற்படும் என கருதப்பட்டதாகவும், தொற்று விகிதம் 6.5 சதவீதமாக உயரும் என்றும் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். இதுவரை இந்தியாவில் இதுவரை 1700 கும் அதிகமான நபர்கள் ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here