டெல்லி ஜேஎன்யூ தாக்குதல் – இந்து அமைப்பு பொறுப்பேற்பு

0
டெல்லி ஜேஎன்யூ தாக்குதல் - இந்து அமைப்பு பொறுப்பேற்பு

டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலுக்கு இந்து ரக் ஷா தளம் என்ற சிறிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.  டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் நேற்று முதல்நாள் மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்கள்.

பொறுப்பேற்பு:

அந்த கடுமையான தாக்குதலால் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்து ரக் ஷா தளம் பொறுப்பேற்றுள்ளது. நாங்கள்தான் ஆட்களை அனுப்பி அங்கு மாணவர்களை தாக்கினோம் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. ஹிந்து ரக் ஷா தள அமைப்பின் தலைவரான பூபேந்திர தோமர் என்ற பிங்கி செளதரி இந்த பேட்டியை அளித்துள்ளார்.  பிங்கி செளதரி தனது வீடியோவில், தேசவிரோத, இந்து விரோத நடவடிக்கைகள் நாட்டில் அதிகரித்துவிட்டது. ஜேஎன்யூவில், இது போல அதிகமாக நடைபெற்றதால், இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இதனால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் எங்கள் மூலம்தான் நடத்தப்பட்டது.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் டெல்லி போலீசார் இந்து ரக் ஷா தளம் அமைப்பின் தலைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here