தலைநகரில் திடீரென அதிகரிக்கும் கொரோனா – மீண்டும் மூடப்படும் பள்ளிகள்? துணை முதல்வர் அதிரடி விளக்கம்!!

0
தலைநகரில் திடீரென அதிகரிக்கும் கொரோனா - மீண்டும் மூடப்படும் பள்ளிகள்? துணை முதல்வர் அதிரடி விளக்கம்!!
தலைநகரில் திடீரென அதிகரிக்கும் கொரோனா - மீண்டும் மூடப்படும் பள்ளிகள்? துணை முதல்வர் அதிரடி விளக்கம்!!

தலைநகர் டெல்லியில், கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மூடப்படுமா? என்ற கேள்விக்கு மாநிலத்தின் துணை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

துணை முதல்வர் விளக்கம் :

இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவல் சற்று குறைந்துள்ளது. இதனால் இது வரை அமலில் இருந்த அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும், கடந்த மாத இறுதி முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனை அடுத்து, நாட்டில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வந்த நிலையில், தலைநகர் டெல்லியில் திடீரென வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக 325 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா? என்ற கேள்விக்கு அம்மாநில துணை முதல்வர் பதிலளித்துள்ளார். அதாவது, பள்ளிகளை மூடும் எந்த எண்ணமும் அரசுக்கு இல்லை என்றும், ஒருவேளை அது இறுதி வாய்ப்பாக தான் இருக்குமே தவிர, இப்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை என விளக்கம் அளித்தார். தேவைப்பட்டால், பள்ளிகள் பாதி அளவில் மூடப்படும் என்று தெரிவித்தார். திடீரென அதிகரிக்கும், வைரஸ் பரவலால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here