பிசிசிஐ நிர்வாகமானது கடத்த 2008ம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் தொடரை நடத்தி வருகிறது. இந்த தொடரில் CSK, MI, RCB போன்ற 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடரானது வரும் மார்ச் 22ம் தேதி முதல் அரங்கேற உள்ளதும் நாம் அறிந்ததே. இந்நிலையில் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இத்தொடருக்கான பயிற்சி முகாமை வரும் மார்ச் 1ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த பயிற்சி முகாமில் மகேந்திர சிங் தோனி மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் இணைய இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.