இந்தியாவின் தேசிய விலங்காக மாடு அறிவிக்கப்பட வேண்டும் – அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சை கருத்து!!

0

நாட்டின் தேசிய விலங்காக பசு மாட்டை அறிவிக்க வேண்டும் மேலும் மாடுகளுக்கு அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.

வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பசு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஜாவேத் என்பவர் கைது செய்யப்ட்டுள்ளார். இவர் அளித்த ஜாமின் மனுவை நேற்று அம்மாநிலத்தில் உள்ள அலகாபாத் நீதிமன்றம் நேற்று (01, செப்டம்பர் 2021) விசாரித்தது.

அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் இறுதியில் பசு இந்தியாவின் கலாச்சாரம் மேலும் ஒரு நாட்டின் கலாச்சாரத்தை காப்பாற்றும் பணி ஒவ்வொரு இந்திய குடிமகனின் பொறுப்பு என்று கூறி ஜாவேத்துக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.

மேலும் அலகாபாத் உயர் நீதிமன்றம், வெவ்வேறு மதங்களை சார்ந்தவர்கள் வாழும் நாடு இந்தியா. அவர்கள் வழிபாட்டு முறையில் வேறுபாடு இருக்கலாம், ஆனால், அவர்களின் சிந்தனை நாட்டிற்காக ஒரே சிந்தனை என்று தெரிவித்துள்ளது. பசுவை தேசிய விலங்காக அறிவிக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்றத்தின் கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here