இந்தியாவில் கடந்த ஒரு நாளில் சுமார் 20 ஆயிரத்துக்கு மேல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
பிக் பாஸ் 6 இல் பங்கேற்கும் முன்னணி நடிகர்.., இணையத்தில் வெளியான நியூ அப்டேட்!!
அதிகரித்த கொரோனா:
கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்த நிலையில், சில வாரங்களாக மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நாளுக்கு நாள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதாவது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த ஒரு நாளில் கொரோனாவால் புதிதாக 20,038 பேர் பாதித்துள்ளனர் மற்றும் 47 உயிரிழந்துள்ளனர்.இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,37,10,027 ஆக உயர்ந்தது மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,25,604 ஆக உயர்ந்தது.மேலும் ஒரே நாளில் 16,994 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.இதனால் ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 4,30,45,350 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்