தமிழ்நாட்டில் புதிதாக 48 பேருக்கு கொரோனா – 700ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..!

0

தமிழகத்தில் ஏற்கனவே 690 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இன்று புதிதாக 48 பேருக்கு கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 700ஐ தாண்டி உள்ளது.

தமிழகத்தில் 738:

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்து உள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார். இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 48ல் 42 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்ட 738 பேரில் 679 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here