கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 6 அடி தூரத்தில் இருந்தாலும் கொரோனா பரவும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் விளக்கம் அளித்திருக்கிறது.
கொரோனா பரவல்:
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை போல இல்லாமல் இளைஞர்களும், சிறியவர்களுக்கு தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
வைகாசி மாத பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை – சபரிமலை நிர்வாகம் அறிவிப்பு!!!
இது குறித்து நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட தகவலின்படி, கொரோனா நோய் உறுதி செய்யப்பட்ட ஒருவரிடம் இருந்து வைரஸ் 6 அடி தூரத்தில் இருந்தால் கூட பரவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் மூடிய காற்றோட்டம் இல்லாத அறைகளில் இந்த பாதிப்பு அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர், உடல் உழைப்பு அதிகம் செலுத்தி வேலைகள் செய்தலும், அவர்களின் மூச்சு காற்று, இருமல், தும்மல், வியர்வை, பேசும் போது பறக்கும் எச்சில் துகள்கள் மூலமாகவும் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.