இந்தியாவில் 60 ஆயிரத்தை தாண்டிய கொரோனா – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

0

இந்தியாவில் அதிவேகமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது நாள் ஒன்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்று கடும் வேகமாக பரவி வருகிறது. இதனால் சில மாநிலங்களில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து பகுதிகளிலும் தற்போது தடுப்பூசி வழங்கும் பணிகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு பற்றிய தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 62,258 பேருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,19,08,910 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு 291 பேர் உரிழந்துள்ளனர். இதனால் மொத்தமாக 1,61,240 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு தங்களது உயிரை இழந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் வாக்காளர்களை மிரட்டி துப்பாக்கி சூடு – சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு!!

இதுபோல் நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 30,386 பேர் குணமாகியுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவில் இருந்து மொத்தம் 1,12,95,023 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 4,52,647 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் தடுப்பூசி வழங்குவதை அதிகரித்தும் கொரோனா வேகமாக பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here