தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு…! மத்திய சுகாதார இணை செயலாளர் தகவல்!!!

0

கொரோனா இரண்டாம் அலை தாக்கம் நாடு முழுவதும் சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் ஒரு தகவல் தெரிவித்து உள்ளார். அதாவது,தினசரி கொரோனா பதிப்பில் 80 சதவீதம் 90 மாவட்டங்களில் இருந்து பதிவாகிறது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை சில  மாவட்டங்களில் இதன் பரவல் சற்று அதிகம் என கூறியுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் ஏறக்குறைய ஒன்றைரை ஆண்டுகளாக நாடு எங்கும் பரவி பல உயிர்களை பலி வாங்கியுள்ளது.  தற்போது இதன் பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் 80 சதவீத தொற்று பாதிப்பு,90 மாவட்டங்கள் மூலமாகவே பதிவாகிறது என கொரோனா நிலவரம் பற்றி மத்திய சுகாதார இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்து உள்ளார்.

அதாவது, தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள், புதுச்சேரியில் 1மாவட்டம், இது போன்ற பல மாவட்டங்களில் தொற்று  பரவல் சற்று அதிகமாக உள்ளது. மேலும் மொத்த பாதிப்பில் 50 சதவீத பாதிப்பு மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் பதிவாகிறது எனவும் தெரிவித்து உள்ளார்.

மேலும் தினமும் தொற்று பாதிப்பு குறைந்த வரும் நிலையில், கடந்த வாரத்தில் புதிய பதிவு 8 சதவீதமாக குறைந்து உள்ளது. மேலும் குணமடையவோர் விகிதம் 97.2 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இந்த தொற்று  பரவலை தடுக்க முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் போன்ற நெறிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு தெரிவித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here