2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாவட்டங்களின் பட்டியல்.. முதலிடத்தை பிடித்த சென்னை!!

0

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் அதிக அளவில் செலுத்தப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் உள்ள 5 முக்கிய நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது. மத்திய அரசு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மக்கள் முதலில் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டினார். பின்னர் தொற்றின் தீவிரத்தை உணர்ந்த மக்கள் தாமாகவே தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன் வந்தனர்.

தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. மத்திய அரசு எடுத்து வரும் தீவிர முயற்சிகளால் நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் சில மாநிலங்களில் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட மக்கள் இரண்டாம் டோஸ் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கள்..

தற்போது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின் படி இரண்டு தவணை தடுப்பூசிகளும் அதிக அளவில் செலுத்தப்பட்ட ஐந்து முக்கிய நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. பெங்களூர், டெல்லி, மும்பை ஆகிய நகரங்கள் அடுத்த நான்கு இடங்களை பிடித்துள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here