நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு சார்பில் மொத்தம் 4820 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் பாதிக்கும் மேற்பட்ட கடைகளில் தொடர்ந்து முறைகேடு நடைபெற்று வருவதாக இணையத்தில் தகவல்கள் உலா வந்தன.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? சபாநாயகர் முக்கிய அறிவிப்பு!!!
தற்போது அதை தடுக்கும் பட்சத்தில் அரசு சிறப்பு குழு அமைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழக முழுவதும் மீண்டும் டாஸ்மாக் கடைகள், பார்களில் முறைகேட்டை தடுக்க திடீர் சோதனைகள் நடத்த முதன்மைச் செயலாளர் அமுதா, ஐ.ஏ.எஸ் தலைமையில் வருவாய் துறை, போலீஸ் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அடக்கிய சிறப்பு குழுவை அரசு அமைத்துள்ளது.