காபி என்றாலே போதும் தமிழ்நாட்டில் பல பேர் உற்சாகமாகி விடுவர். அந்த அளவிற்கு காபி நம்மிடையே பிரபலமாகி உள்ளது. மேலும் இன்று உலக காபி தினமாக கொண்டாடப்படுகிறது. சில ராசிக்காரர்கள் தான் காபி பிரியர்களாக இருப்பார்களாம். இதற்கு அவர்களின் ராசி அதிபதிகள் காரணம் என கூறுகின்றனர்.
காபி:
காலையில் கண் விழப்பதே இந்த காபியில் தான். இந்த காபிக்கு பல பேர் அடிமையாகி உள்ளன. பல பேருக்கு காபி குடிக்கவில்லை என்றால் அந்த நாளே ஓடாது. அந்த அளவிற்கு காபி குடிப்பதில் அரவம் காட்டி வருகின்றனர். இந்த காபி குடிப்பதால் உடலும் மனமும் புத்துணர்ச்சி ஆகிறது. மூளையும் சுறுசுறுப்படைகிறது. இந்த காபிக்கு சில வரலாறுகளும் கூறுகின்றனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
மொரோக்கோ நாட்டை சேர்ந்தவர் நூரூதீன் அபு அல் ஹசன் என்ற அறிஞர். இவர் எதியோப்பியா என்ற நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஒரு மரத்தின் பழங்களை பறவைகள் சாப்பிட்டு விட்டு உற்சாகமாக இருப்பதை கண்டுள்ளார். அவரும் அந்த பழத்தில் என்ன இருக்கிறது என்று சாப்பிட்டு பார்த்துள்ளார். அவருக்கும் அது உற்சாகத்தையே அளித்துள்ளது. அதிலிருந்து தான் காபி உருவாகி உள்ளது. தற்போது இந்த காபி பல வகைகளில் தற்போது கிடைக்கிறது.
ஆனால் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் இந்த காபிக்கு அடிமையாகி இருப்பார்களாம். இதற்கு அந்த ராசி அதிபதிகளே காரணம் என்று கூறுகின்றனர். அதாவது செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்டவர்கள் அல்லது லக்கினமாக கொண்டவர்களோ, அல்லது ஆட்சி , உச்சம் பெற்றவர்கள் காபி பிரியர்களாக இருப்பார்களாம். இவர்கள் காபிக்காக உயிரை கூட கொடுப்பவர்களாக இருப்பார்களாம்.
மேலும் விருச்சிக ராசியை லக்கினமாக கொண்டவர்கள் கருப்பு காபியை விரும்புபவராக இருப்பர். ஏனெனில் செவ்வாய் அந்த ராசியில் ஆட்சி பெறுகிறார். மேலும் கருப்பு காபியில் பால் சேர்ப்பதில்லை. பால் சந்திரனை குறிக்கும். இந்த சந்திரன் விருச்சிகத்தில் நீசமடைகிறார். மேலும், மேஷம் செவ்வாயின் வீடு ஆகும். அதில் சூரியன் நிற்பதால் உச்சம் அடைகிறார்.
உங்கள் ஜாதகத்தில் இவ்வாறு அமைந்து இருந்தால் காபிக்கு உங்கள் சொத்தையே எழுதி வைக்கும் அளவிற்கு இருப்பிர்கள். மேலும் காபி போடுவதற்கு ஒரு தனி கலையே வேண்டும். பால், சர்க்கரை போன்றவற்றின் அளவு சரியாக இருந்தால் மட்டுமே அந்த காபி ருசிப்படும். இதற்கு செவ்வாயின் ஆதிக்கம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.