அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 26 விதமான உயர்ந்த பதவிகளுக்கான காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்வானது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என இரு மொழிகளின் வாயிலாக கேள்வித்தாள் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த தேர்வுக்கு தேர்வர்கள் அனைவரும் அவர்களது மாநில மொழிகளில் எழுதலாம் என அரசானது அனுமதியளித்து.
ஆனால், கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப்பட்டு வருவதால் வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு மறுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், கேள்வித்தாள்களையும் அவர்களது மாநில மொழிகளிலேயே அமைக்க வேண்டி மதுரையைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். சமீபத்தில் விசாரணைக்கு வரப்பட்ட இந்த வழக்கிற்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கருத்துக்கள் இன்னும் பெறப்படாத நிலையில், விரைவில் இது தொடர்பாக கருத்தை வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
தேங்கிய மழை நீரில் கெமிக்கல் கலப்படம்., களத்தில் ”விஜய் மக்கள் இயக்கம்” செய்த அந்த செயல் வைரல்!!!