கோலிவுட் திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் யாஷிகா ஆனந்த். இவர் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டு குத்து உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் இதையடுத்து பட வாய்ப்பு கிடைத்து பிசியாக நடித்து வருகிறார். இப்படி தனது கெரியரில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனது 13 வயதில் தனக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்து மனம் திறந்துள்ளார்.
அதாவது நடிகர் சந்தானத்தின் இனிமே இப்படித்தான் என்ற திரைப்படத்தில் சின்ன ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்த போது ஒரு ஆண் ஒருவர் இவரிடம் அத்துமீறி உள்ளராம். அந்த வயதில் அவர் செய்வது சரியா? தவறா? எனக் கூட தெரியவில்லையாம். ஆனாலும் அந்த நபரை எட்டி உதைத்து கீழே விழ வைத்தாராம் இவ்வாறு தனது 13 வயதில் சினிமாவில் நுழைந்த போது தனக்கு நடந்த கொடுமையை பகிர்ந்து கொண்ட இவர் பெண்களுக்கு தைரியம் தான் முக்கியம் என கூறியுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
ஆதார் எண் மட்டும் போதும் உங்க எவ்வளவு பணம் இருக்குனு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்…, முழு விவரம் உள்ளே!!