கிரிக்கெட் அரங்கில் ‘யூனிவர்சல் பாஸ்’ என்பதை மீண்டும் கிறிஸ் கெய்ல் நிரூபித்துள்ளார். ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய இவர், ‘டுவென்டி 20’ அரங்கில் 1000வது சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
முதலிடம்
ஐக்கிய அரபு எமிரேட்சில் 13வது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் நடக்கிறது. அபுதாபியில் நடந்த 50வது லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெய்ல், மின்னல் வேகத்தில் ரன் சேர்த்தார். 63 பந்தில் 99 ரன்கள் விளாச, பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி, 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 186 ரன்கள் குவித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இப்போட்டியில், பஞ்சாப் அணியின் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்ல் அதிரடியாக விளையாடினர். எதிர் அணியின் தியாகி வீசிய 19வது ஓவரின் 5வது பந்தை சிக்சருக்கு பறக்க விட்டார். இதன் மூலம், டுவென்டி 20 அரங்கில், 1000வது சிக்சரை பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இதுவரை 410 போட்டியில், 1001 சிக்சர் அடித்துள்ளார். இப்பட்டியலில், அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீசின் போலார்டு (690 சிக்சர், 524 போட்டி), நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (485 சிக்சர், 370 போட்டி) உள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஐ.பி.எல்., அரங்கில் அதிகம்
ஒட்டு மொத்த ஐ.பி.எல்., அரங்கில், அதிக சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில், கெய்ல் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இதுவரை 131 போட்டியில், 349 சிக்சர் விளாசி உள்ளார். அடுத்த இரண்டு இடங்கள் முறையே தென் ஆப்பிரிக்காவின் டிவிலியர்ஸ் (232 சிக்சர், 166 போட்டி), இந்தியாவின் தோனி (216 சிக்சர், 203 போட்டி ) உள்ளனர்.