உலக நாடுகளின் மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதி & நிறுவனங்களை வாங்கும் முயற்சியில் சீனா – அம்பலமான நரித்தந்திரம்.!

0

சீனாவின் ஹவான் நகரில் தொடங்கி தற்போது உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கொத்து கொத்தாக உயிர் பலி வாங்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் எதிர்பாராத வகையில் சீனாவில் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் இது சீனாவின் உயிரி ஆயுதமா அல்லது பிசினஸ் பிளானா என உலக நாடுகள் சந்தேகம் எழுப்பி உள்ளன.

மருத்துவ உபகரணங்கள்:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ காரணமாக இருந்த சீனா தற்போது அதன் மூலம் லாபம் ஈட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது. கொரோனா பரவலை தங்கள் நாட்டில் கட்டுப்படுத்தி விட்டதால் சீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில் கொரோனவால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளுக்கு உதவும் வகையில் வியாபாரம் ஈட்ட சீன இறங்கியுள்ளது. முதல் கட்டமாக கொரோனாவல் பேரிழப்பை சந்தித்து வரும் ஸ்பெயினுக்கு 15 டன் மருத்துவப் பொருட்களை சீனா வழங்கியது.

9000 புதிய நிறுவனங்கள்:

தற்போது சீனாவில் உள்ள தொழிற்சாலைகளின் முக்கிய குறிக்கோள், கொரோனா தடுப்பிற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதுதான்.சீனாவில் உள்ள 60% தொழிற்சாலைகள் தற்போது அதிக அளவில் மாஸ்குகள், வெண்டிலெட்டர்கள், கிளவுஸ், உடலை மூடும் துணிகள் என்று அனைத்தையும் உற்பத்தி செய்ய தொடங்கி உள்ளது. அங்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 9000 நிறுவனங்கள் மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டு உள்ளது.

ஏற்றுமதி பிளான்:

ஏற்கனேவே வெளிநாட்டிற்கு சீனா பொருட்களை ஏற்றுமதி செய்ய தொடங்கி உள்ளது. இனி அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, இந்தியா என்று எல்லா நாடுகளும் தங்கள் நாட்டில் உற்பத்தி இல்லாத காரணத்தால் சீனாவை நம்பி இருக்கும் நிலைக்கு சென்றுள்ளது.

அதே சமயம், கொரோனா காரணமாக ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் உடைந்து போய் இருக்கும் நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவின் நிறுவனங்களை வாங்க சீனா முயன்று கொண்டு வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here