மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 19ஆம் தேதி தொடங்கும் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து மாநிலங்களிலும் பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நாளை அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இந்த கூட்டம் நாளை மாலை 3 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் தேர்தல் குறித்து பல அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.