வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னை மாநகரமே இந்த புயலால் ஸ்தம்பித்து போய் உள்ளது. இதனால் தமிழக அரசு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த புயல் காரணமாக கடந்த 4 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த விடுமுறை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் அனைத்தும் முதலில் 4ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மிக்ஜம் புயல் காரணத்தால் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அதற்கான மாற்றுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தேர்வுகள் அனைத்தும் 11ம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு குறித்து விவரங்களை தெரிந்து கொள்ள www.unom.ac.in என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
பெண் கல்விக்கு ஆதரவாக திரும்பும் தாலிபான் அரசு? வெளியுறவுத்துறை அமைச்சர் பகீர்!!!