தமிழகத்தில் ஊரடங்கு எதிரொலி….சென்னையில் 10,000 போலீஸ் குவிப்பு – உச்சகட்ட பதற்றத்தில் பொதுமக்கள்!!

0

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதால், சென்னை மாநகரில் இதற்கான பாதுகாப்பு பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

பணிகள் தீவிரம் :

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், ஜனவரி 6ஆம் தேதியான இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர பொது முடக்கம் அமலுக்கு வருகிறது. மேலும் ஜனவரி 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு பொது முடக்கம் அமலாகிறது. இந்த நிலையில், இன்று ஊரடங்கு அமலுக்கு வருவதால், மாநிலத்தின் தலைநகரான சென்னையில் 499 மையங்களில் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவ பணிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்க பட்டுள்ள இந்த நிலையில், பொதுமக்கள் மற்ற காரணங்களுக்காக வெளியே வர முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. அதுபோல அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here