சென்னை மக்களுக்கு நற்செய்தி., இந்த மாநகர பேருந்தில் UPI பேமெண்ட் மூலம் டிக்கெட்?  முக்கிய அறிவிப்பு!!!

0
சென்னை மக்களுக்கு நற்செய்தி., இந்த மாநகர பேருந்தில் UPI பேமெண்ட் மூலம் டிக்கெட்?  முக்கிய அறிவிப்பு!!!

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு விதமான போக்குவரத்து வசதிகளை தமிழ்நாடு அரசு மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர ஆணையம் (CUMTA), அனைத்து MTC பேருந்துகளிலும் QR அடிப்படையிலான டிக்கெட் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருந்தனர். அதன்படி தற்போது பல்லாவரம் பெருநகர போக்குவரத்து பயணிகளுக்கு, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், “முதற்கட்டமாக பல்லாவரம் MTC பேருந்து நடத்துனர்களுக்கு, டச் ஸ்க்ரீன் வசதியுடைய கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பயணிகள் ஏறும் இடம் மற்றும் சேருமிடத்தை, நடத்துனர் தேர்வு செய்வார். இதன்பிறகு திரையில் தோன்றும் பணம், UPI, கார்டு உள்ளிட்ட பல்வேறு கட்டண விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை செலக்ட் செய்து பயணிகள் பணம் செலுத்தலாம். சென்னையில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் விரைவில் இந்த வசதி நடைமுறைப்படுத்தப்படும்.” என தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தமிழக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்??…, வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here