சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பயணத்தை எளிதாக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் தான், மெட்ரோ ரயில் சேவை மக்களுக்காக தமிழக அரசு கொண்டு வந்தது. மேலும், பல்வேறு வசதிகளையும் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தில் புகுத்தி வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதன் மூலம், போக்குவரத்து நெரிசல் சற்று குறைவதுடன், மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை மெட்ரோ ரயில் நிர்வாகமானது, தற்போது புள்ளி விவரத்துடன் வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த வருடத்தின் முதல் மாதத்தில் (1.1.2023-31.1.2023) மட்டும் 66,07,458 பயணிகள் மெட்ரோ ரயில் பயணம் செய்துள்ளனர்.
படப்பிடிப்பை நிறைவு செய்த “ஜவான்” படக்குழுவினர்.., குறித்த தேதியில் படத்தை வெளியிட பாடுபடும் அட்லீ!!
இதனை தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில் சற்று குறைவாக 63,69,282 பயணிகளும், மெட்ரோ ரயிலில் பயணித்து உள்ளனர். இந்த இரு மாதங்களை விட, கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 69,99,341 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாக அறிவித்துள்ளது. இதில், குறிப்பாக 10.3.2023 ஆம் நாள் மட்டும் 2,58,671 பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது. மேலும், மெட்ரோ ரயில் சேவை எளிதாகும் விதமாக, க்யுஆர் கோடு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டண தள்ளுபடியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.