சென்னை மாநகராட்சியின் மேயரான பிரியா அவர்கள், நேற்று (பிப்.23) இரவு காரில் வந்தபோது, சென்னீர்குப்பம் மேம்பால கீழ் விபத்துக்குள்ளானது. அதாவது முன்னால் சென்று இருந்த கார் பிரேக் அடித்ததால், மேயர் பிரியாவின் கார் மோதியது. அந்நேரத்தில் பின்னால் வந்த காரும் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதனால் மேயர் பிரியாவின் கார் முன் பின் இருபக்கமும் சேதமடைந்து இருந்தாலும், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விவரம் அறிந்து வந்த காவல்துறையினர், மேயர் பிரியாவை மீட்டு, வேறொரு காரில் சென்னைக்கு அனுப்பினர். அதோடு முதற்கட்ட விசாரணையில், மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், வேகமாக வந்துள்ளதால் தான் என உறுதி செய்துள்ளனர். விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ISL 2024: அன்னிய மண்ணில் அசத்திய மும்பை.. சென்னை அணிக்கு எதிராக கோல் மழை!!