“பயணிகள் கனிவான கவனத்திற்கு”., இனி இத கேட்க முடியாது! ஆடியோ அறிவிப்பை நிறுத்த உத்தரவு!!

0
"பயணிகள் கனிவான கவனத்திற்கு"., இனி இத கேட்க முடியாது! ஆடியோ அறிவிப்பை நிறுத்த உத்தரவு!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்துவதற்காக, தென்னக ரயில்வே அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதிரடி அறிவிப்பு:

ரயில் நிலையங்களில், பயணிகளின் வசதிக்காக பல்வேறு  நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்து வருகிறது. அந்த வகையில், ரயில் நிலையங்களில் வழங்கப்படும் உணவுகளை தரமாகவும், Variety ஆகவும் வழங்குவதற்காக சூப்பர் அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனைத் தொடர்ந்து தலைநகரில் அமைந்துள்ள, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை  சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்த, சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது, ரயில் நிலையத்தில் இரைச்சலைப் போக்கி அமைதியான சூழலை மேம்படுத்துவதற்காக, இனி ஆடியோ மூலம் பயணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்படாது.

மணிமேகலை கேரக்டரே இதுதான்., CWC நடுவர் வெங்கடேஷ் பட் சொன்ன ஷாக்கிங் உண்மைகள்!!

இதற்கு மாற்று ஏற்பாடாக, திரைகளில் ரயில்கள் வருகை குறித்து காட்டப்படவும், இந்த தகவல்களை வழங்குவதற்கு  ரயில் நிலையம் முழுவதும் கவுண்டர்களை அமைக்கவும்  தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. முழுக்க முழுக்க ரயில் நிலையத்தை அமைதியாக வைத்திருக்க மட்டுமே இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும், இதற்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனவும் தென்னக ரயில்வே பொது மேலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here