மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ரேஷன் கடைகள் மூலம் 6000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி ரேஷன் கார்டு இல்லாத வெளி மாவட்டத்தினருக்கும் ரேஷன் கடை மூலம் வெள்ள நிவாரணத்திற்கான விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.
அந்த விண்ணப்பத்தில் ஆதார் எண், வங்கி கணக்கு எண், முகவரி, பாதிக்கப்பட்ட வீட்டின் வகை, பாதிக்கப்பட்ட பொருட்கள் உட்பட 11 கேள்விகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் அரசு ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பின் படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.