தமிழக பள்ளி மாணவர்களே.., இந்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வில் மாற்றம்.., பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!!

0
தமிழக பள்ளி மாணவர்களே.., இந்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வில் மாற்றம்.., பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!!
தமிழக பள்ளி மாணவர்களே.., இந்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வில் மாற்றம்.., பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு  டிசம்பர் 7ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்போது எதிர்பாராவிதமாக ஏற்பட்ட மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த தொடர் விடுமுறை காரணமாக மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்போது இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால், தற்போது சிரமங்களை தவிர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடக்க இருந்த தேர்வுகள் டிசம்பர் 14 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here