கடந்த சில தினங்களுக்கு முன் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மிக்ஜாம் புயலாக வலுப்பெற்று சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் புயல் நேற்று (டிசம்பர் 5) நண்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை கடந்தது. இதனால் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று (டிசம்பர் 6) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழையும், டிசம்பர் 9ஆம் தேதி தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
பாலின விகித வேறுபாட்டை போக்க அரசு புதிய திட்டம்.., முக்கிய தகவல் வெளியீடு!!