கொரோனாவின் தாக்கம் படிபடியாக குறைந்து வரும் வேளையில் சண்டிகர் அரசு ஏற்கனவே உள்ள ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து உள்ளது.
நாட்டில் கடந்த மே, ஜூன் மாதங்களில் கூடிய கொரோனா தொற்று செயல்படுத்தப்பட்ட தீவிர ஊரடங்கால் நன்கு குறைந்தது. இதனால் இந்தியாவில் பல மாநில அரசுகள் கொரோனா குறைந்த காரணத்தினால் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருகிறது.
தற்போது சண்டிகர் அரசும் சில தளர்வுகளை அளித்துள்ளது. அதே சமயம் மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற அரசு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளது.
சண்டிகர் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சண்டிகரில் அமலில் இருந்த இரவு ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. மேலும் பார்கள் மற்றும் உணவகங்கள் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50% பயணிகள் மட்டுமே பொது போக்குவரத்தில் பயணிக்க வேண்டும் என்ற தடையும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்