ராஜா ராணி சீரியலில் தற்போது சிவகாமி பார்வதி மீது கடும் கோவத்தில் உள்ளார். மேலும் சந்தியாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போக சரவணன் கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்கிறார்.
ராஜா ராணி 2
காலையில் சிவகாமி பார்வதி மேல் இருக்கும் கோவத்தில் காய்கறிகள் மீது கோவத்தை காட்ட ஆரம்பிக்கிறார். அப்பொழுது ரவி அங்கு வர பார்வதியின் ஆசையை நிறைவேற்றுவோம் என்று சொல்கிறார். மேலும் காதல் எல்லாம் இந்த காலத்தில் சகஜம் என்றும் சொல்கிறார்.
ஆனால் சிவகாமியால் இதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அடுத்ததாக அர்ச்சனாவும் அங்கு வர பார்வதியை பற்றி வத்தி வைக்கிறார். இது சரிப்பட்டே வராது என்றும் சொல்கிறார். அவரு பேங்க்ல வேற வேலை பாக்குறாரு எத்தனை பொண்ணுங்களோட பழக்கம் இருக்கோ என்று சொல்கிறார்.
அப்பொழுது பார்வதி வந்து விட தன் வாழ்க்கையை கெடுக்க எப்படி முந்திக்கிட்டு வரீங்க என்று சொல்கிறார். அதற்கு சிவகாமி பார்வதியை திட்ட ஆரம்பிக்கிறார். என் வயித்துல பொறந்துட்டு இப்படி ஒரு காரியத்தை செஞ்சுட்டு வந்து நிக்கிற என்று கத்துகிறார்.
அப்பொழுது சந்தியாவும் சரவணனும் வர இருவரும் முழுக்க நனைத்திருப்பதை பார்த்து விட்டு சிவகாமி பதறுகிறார். அடுத்து சந்தியாவிற்கு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருக்க சரவணன் தன் அம்மாவிடம் தனக்கு உடம்பு சரியில்லை என்று பொய் சொல்லி கசாயத்தை வாங்கிக்கொண்டு வருகிறார்.
வீட்டில் உள்ள அனைவரையும் சமாளித்து விட்டு உள்ளே வர சந்தியா கஷாயத்தை குடிக்க முடியாமல் தவிக்கிறார். அப்பொழுது சரவணன் அப்பறமா குடுச்சுக்கலாம் என்று சொல்கிறார். இதனால் சந்தியா தனக்கு பிடிச்சதெல்லாம் செய்ரீங்க உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு என்று சொல்கிறார்.
பாரதி கண்ணம்மா சீரியலை விடியோவாக பார்க்க கிளிக் செய்யவும்.
அப்பொழுது வேலைக்கார பெண் உள்ளே வந்து சரவணனிடம் உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு பொய் சொல்லி தானே கஷாயம் வாங்குனீங்க இப்போ பார்த்தால் சந்தியாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்றங்க என்று கேட்கிறார். சரவணன் செய்வதறியாது தவித்து வருகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்