தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக வானிலை நிலவரமானது தொடர்ந்து மாறி வருகிறது. அதாவது, கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இந்த வகையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, கோவை, தேனி, ஈரோடு, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.