ரயில் பயணிகளே…, இந்த வழித்தடங்களில் சிறப்பு ஏற்பாடு…, தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!

0
ரயில் பயணிகளே..., இந்த வழித்தடங்களில் சிறப்பு ஏற்பாடு..., தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!
வார விடுமுறையில் போக்குவரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக ஒவ்வொரு மாநில அரசும் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்களை கூடுதலாக இயக்கி வருகிறது. அந்த வகையில் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
இதன்படி, இன்று (நவம்பர் 28) முதல் வரும் ஜனவரி 30 ஆம் தேதி வரை சென்ட்ரல் – கோவை வழியாக வந்தே பாரத் சிறப்பு ரயில் வாரந்தோறும் அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், சென்ட்ரல் – மைசூர் வந்தே பாரத் வார சிறப்பு ரயில் நாளை (நவம்பர் 29) முதல் டிசம்பர் 27 ஆம் தேதி வரை அனைத்து புதன் கிழமையும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here