இன்றைய காலகட்டத்தில் இணையவழி மோசடி செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பெரும்பாலானோர் பணத்தை இழந்து கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அந்த வகையில் வாட்ஸ்அப் செயலி மூலமாக ஏழு விதமான மோசடி செயல்கள் அரங்கேறி வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பி.பி.ஆர்.டி. எனும் போலீஸ் குழு எச்சரித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது வீடியோ அழைப்பு, ஆள்மாறாட்டம், முதலீட்டு திட்டங்கள், மிஸ்டு கால் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் முறைகேடுகள் அரங்கேற்றப்படுகின்றன. குறிப்பாக கென்யா, மலேசியா போன்ற வெளிநாட்டு எண்களில் இருந்து மிஸ்டு கால் வந்து ஏமாற்றி வருவதால், முன்பின் தெரியாத வாட்ஸப் அழைப்புகளை நிராகரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழக மக்களே.., இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு.., இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!!