உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில், நாளை மறுநாள் (ஜனவரி 22) பிரதமர் மோடி முன்னிலையில் ராம்லாலா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிலையில் சமூக வலைத்தளம் உட்பட பல்வேறு இடங்களில் போலியான செய்திகள் பரவி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது “சமூக வலைதள நிறுவனங்கள், செய்தி நிறுவனங்கள், சேனல்கள் போன்றவை மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் திரிக்கப்பட்ட செய்தி மற்றும் போலியான செய்திகளை வெளியிட கூடாது.” என தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்த விதிகளை மீறினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.