இன்றைய காலத்தில் பல்வேறு விதமான இணையவழி மோசடி செயல்கள் அரங்கேறி வருகிறது,. இதனை தடுத்து மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதிய தொலைத்தொடர்பு மசோதாவை மக்களவையில் நேற்று (டிச. 20) நிறைவேற்றி உள்ளனர். தற்போது இறுதி ஆய்வுக்காக ராஜ்யசபாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இம்மசோதா வில் எந்த ஒரு தொலைத்தொடர்பு சேவை அல்லது நெட்வொர்க்கையும் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கம் கையகப்படுத்தவோ, நிர்வகிக்கவோ அல்லது இடைநிறுத்தவோ முடியும். அதேபோல் போலி சிம் வாங்குபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் இனி ஒரே நேரத்தில் யூஸ் பண்ணலாம்…, புதிய சேவையை அறிமுகப்படுத்தும் மெட்டா!!