நாடு முழுவதும் விவசாயிகளை ஊக்குவிக்க ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு உரம், மருந்து உள்ளிட்டவைகளில் மானியங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ரபி பருவ காலத்தில் விவசாயத்திற்கு தேவையான ஊட்டச்சத்து சார்ந்த உரங்களுக்கு மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனை தொடர்ந்து ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரையிலான கரீப் பருவ காலம் நடைபெற்று வருகிறது. இக்காலத்தில் விவசாயங்களுக்கு தேவையான பாஸ்பேட் மற்றும் பொட்டாஸ் உரங்களுக்கு மானியம் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் வீட்டில் விசேஷம்.., கூடிய விரைவில் டும் டும் டும் தான்.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
இதுதவிர யூரியா மற்றும் டிஏபி உரத்திற்கும் மானியம் வழங்க ரூ.1.08 லட்சம் கோடி நிதி ஒதுக்கி ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும், 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.