உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இருந்து கச்சா மற்றும் சமையல் எண்ணெய்களை அதிகப்படியான அளவில் இறக்குமதி செய்து வருகிறது இந்தியா. அப்படி இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்களுக்கு சர்வதேச சந்தையில் நிர்ணயிக்கப்படும் விலை மதிப்பை பொறுத்து, தனியார் நிறுவனங்கள் தங்களின் விற்பனை விலைகளை நிர்ணயித்து கொள்கின்றனர்.
இந்த பகுதியில் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைக்கு விடுமுறை – மதுபிரியர்கள் ஷாக்!!
அந்த வகையில் கடந்த மாதம் கச்சா எண்ணெய்களின் விலை குறைந்ததை ஒட்டி வணிக சிலிண்டர்களின் விலையில் குறைவு ஏற்பட்டது. அதேபோல் இந்த மாதம் சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய்யின் விலை ஒரு டன்னுக்கு 200 ல் 250 டாலர்கள் வரை குறைந்துள்ளது. இதனால் இந்த விலை குறைப்பை உள்நாட்டு மக்களுக்கு விரைவாக சென்றடையும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன் படி இந்தியாவில் இயங்கும் சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள், சர்வதேச சந்தையின் எண்ணெய் நிலவரப்படி தங்களின் அதிகபட்ச விற்பனை விலையை (MRP) குறைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக சமையல் எண்ணெய்களின் விலை குறைந்த நிலையில் பல தனியார் நிறுவனங்கள் தங்களின் (MRP) விலையை ரூ.15 – 20 வரை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.