கொரோனா தடை காலங்களில் மக்களிடையே மிகப்பெரிய அளவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு வளர்ச்சி அடைந்தது. இதனால் விளையாட்டில் ஈடுபடுபவர் பணத்தை இழந்து நிதி நெருக்கடிக்கு ஆளாகி மனமுடைந்து தற்கொலை செய்து வருகின்றனர். இதுவரை 17 பேர் தற்கொலை செய்துள்ளதால் ஆன்லைன் விளையாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்து வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் கடந்தாண்டு தமிழகத்தில் அவசர தடை சட்டம் பிறப்பித்து வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற காவல்துறை உயர் அதிகாரி டிஜிபி சைலேந்திர பாபு தமிழக அரசிடம் கோரினார். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு மும்பரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
கயல் சீரியலில் இருந்து விலகிய சஞ்சீவ்.., மனைவியுடன் ஜோடி சேருகிறாரா?? வெளிவந்த உண்மை!!
இந்நிலையில் சிபிசிஐடி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் எதிரணியில் விளையாடுபவர் மனிதரா? அல்லது கம்ப்யூட்டரா? என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விளையாட்டில் உள்ள சிக்கல்களையும் ஆய்வு செய்ய சிபிசிஐடி போலீசார் சாதாரண மனிதர் போல் விளையாட உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.