தமிழகத்தில் கிட்டத்தட்ட 1500 மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. இருப்பினும் மக்களின் நலன் கருதி கொஞ்சம் கொஞ்சமாக டாஸ்மாக் கடைகளை மூடி வருகிறது. சமீபத்தில் கூட 500 டாஸ்மாக் கடைகள் மற்றும் 500 பார்கள் இழுத்து மூடப்பட்டன. மேலும் டாஸ்மாக் கடைகளில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் குடித்து முடித்த மதுபாட்டில்களை கீழே தூக்கி போடாமல் அரசாங்கமே பெற்று வருகிறது. அதாவது காலி பாட்டிலை திரும்ப பெறும் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் முதலில் ஆரம்பிக்க தயாராக இருக்கிறது. மேலும் நடப்பாண்டு இறுதிக்குள் காலி பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறதாம்.
Enewz Tamil WhatsApp Channel
ஐ.டி. துறையில் லட்சக்கணக்கில் ஊதியம் பெற வேண்டுமா? தமிழக இளைஞர்களுக்கான அறிவிப்பு!!!