கொரோனா ஊரடங்கு நேரத்தில் உத்திரபிரதேசத்தில் மணமகள் இறந்ததும் மணமகளின் தங்கையை திருமணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்கில் பெரும் வைரலாகி வருகிறது.
மணமகளின் தங்கையுடன் திருமணம் :
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தியுள்ளது. அதில் திருமணத்திற்கு மக்கள் கூடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே திருமணத்திற்கு அதிகபடியான மக்கள் அனுமதிக்கப்படாததை தொடர்ந்து ஆங்காங்கே குறைவான உறவினர்களைக்கொண்டு திருமணங்கள் நடந்து கொண்டுள்ளன. இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் நடந்த சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் சனாத்பூரில் திருமணம் ஒன்று முடிவு செய்யப்பட்டது. திருமணத்தன்று காலையில் திடீரென மணமகளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் மணமகள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
செய்வதறியாது நின்ற திருமண வீட்டார் உறவினர்களின் ஆலோசனையின் பேரில் மணமகளின் தங்கையை திருமணம் செய்து வைத்த நிகழ்ச்சி அரங்கேறியது. இது போன்ற வினோதமான திருமணம் நடந்ததை அப்பகுதியில் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்ததோடு மட்டுமல்லாம் இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.