இந்த கொரோனா காலகட்டத்தில் கடந்த சில மாதங்களாக நடிகர்கள் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது, அந்தப்படி இன்று நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் மர்மநபர்களால் விடுக்க பட்டு உள்ளது.
நடிகர்கள் வீட்டிற்கு மிரட்டல்:
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் ரஜினியின் வீட்டிற்கு ஒரு மனநலம் பாதிக்கபட்ட சிறுவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொரோனா காலகட்டத்தில் சிலர் செய்யும் தவறுகளால் காவலர்களுக்கு பணிச்சுமை அதிகமாகவுள்ளது. தொடர்ந்து, நடிகர் விஜய் வீட்டிற்கும் மர்மநபர்கள் மிரட்டல் விடுத்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு நபர்களை கண்டுபிடித்தனர்.
தற்போது அடுத்து..
இப்படியான நிலையில், தற்போது தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகரான அஜித் குமார் வீட்டிற்கும் மிரட்டல் விடுக்கபட்டுள்ளது. இந்த மர்மநபர் காவல் கட்டுப்பாடு அறைக்கு போலீசாரிடம் நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தகவலை தெரிவித்து உள்ளார்.
இந்த செய்து அறிந்த போலீசார் சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டிற்கு மோப்ப நாய்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டு உள்ளனர், அதில் வெடிகுண்டு மிரட்டல் தவறான தகவல் என்று தெரிய வந்து உள்ளது.
இதனால், போலீசார் மர்ம நபரை கண்டுபிடிக்கும் சோதனையில் உடனடியாக ஈடுபட்டனர். அதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நபர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளது தெரியவந்து உள்ளது. போலீசார் வழக்கு பாதிப்பு செய்து உள்ளனர்.