கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம் – மும்பை மக்கள் அவதி!!

0
மும்பையில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் இரண்டு நாட்களுக்கு (19,20 ஆகஸ்ட் 2021)  தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் தடுப்பூசி செலுத்தப்படும் என பெருநகர மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதனால் கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்நிக் வி தடுப்பூசி மருந்துகள் பொதுமக்களுக்கு ஊசி மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது.
இந்நிலையில் மும்பையிலும் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பெருநகர மும்பை மாநகராட்சி, இன்றும் நாளையும் அதாவது ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மீண்டும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படுவதாகவும், தடுப்பூசிகள் இன்று (ஆகஸ்ட் 19) இரவு மும்பை வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பெருநகர மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here