கொரோனா தாக்கத்தினால் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கும் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது பா.ஜ.க எந்த போராட்டமோ அல்லது ஆர்பாட்டமோ ஒரு மாதத்திற்கு நடத்த மாட்டோம் என அறிவித்துள்ளது.
கொரோனா
கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வரும் காரணத்தால் சுகாதார நடவடிக்கை மேற்கொள்வது நல்லது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேற்கொண்டு எந்த போராட்டமோ, ஆர்பாட்டமோ ஒரு மாதத்திற்கு நடத்தப்பட மாட்டாது என்று பாஜக முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து எந்த கட்சி பொது கூட்டமும் நடைபெறாது என்றும் கூறி இருக்கின்றனர்.
‘பிரதமர் மோடி நேற்று நடைபெற்ற பாராளுமன்றக் கட்சி கூட்டத்தில் பேசும்போது, கொரோனா வைரஸ் காரணமாக எந்தவொரு போராட்டத்தையும், தர்ணாவையும், ஆர்ப்பாட்டத்தையும் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். அதன் அடிப்படையில், அடுத்த ஒரு மாதத்திற்கு எந்தவொரு போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்பதில்லை என்று பாஜக முடிவு செய்துள்ளது’ என நட்டா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |