பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே கடந்த (ஜனவரி 14) அன்று நடைபெற்றது. இதன் டைட்டிலை அர்ச்சனா வென்று அசத்தினார். இதன் மூலம் பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் கோப்பையை வென்ற முதல் வைல்ட் கார்டு போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார். இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் விஷ்ணு குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா, மணி இவர்கள் மூவரில் யார் வெற்றி பெற்றாலும் 10,000 வாலா பட்டாசு வெடிப்பேன் என தெரிவித்து இருந்தார். அதன்படி டைட்டில் வென்ற அர்ச்சனாவிற்காக தற்போது 10,000 வாலா சரவெடியை வெடித்து விஷ்ணு அசத்தியுள்ளார். தற்போது அவர் பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
View this post on Instagram