இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் வெளியேறப் போகும் நபர் யார்?? இணையத்தில் கசிந்த தகவல்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இந்த வாரம் எலிமினேஷன் ப்ராஸஸ் நடந்து கொண்டுள்ளது. இந்த வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் அந்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களின் பல எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்டது. இப்பொழுது தான் ஆரம்பித்தது போல இருந்த இந்த சீசன் 7 வது வாரத்தை தொட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்த வாரங்களில் பல கடினமான டாஸ்குகளையும் பிக் பாஸ் கொடுத்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

போட்டியாளர்களும் இதற்கு சலித்தவர்கள் இல்லை என்பது போல வெயில், மழை என்று பாராமல் போட்டியில் கடுமையாக உழைத்து வந்தனர். நேற்று கூட சுவாரசியம் குறைவாக இருந்ததற்காக சுசி மற்றும் பாலாஜியை ஓய்வெடுக்கும் அறைக்கு அனுப்பினர். இதனால் பாலாஜியை பிரிந்து ஷிவானியும் தவித்து வந்தார்.

பலரும் இதனை கேலி செய்தனர். இப்பொழுது இந்த வார இறுதியை நெருங்கியுள்ள நிலையில் யார் வெளியேறப் போகிறார்கள் என்று பதட்டத்தில் உள்ளனர். 6 வாரங்கள் முடிவடைந்த நிலையில் ஏற்கனவே ரேகா, வேல்முருகன் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறினார்கள்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த வாரத்தில் சோம், சம்யுக்தா, ரியோ, பாலாஜி, சுசித்ரா, அனிதா மற்றும் ஆரி நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். ஆரிக்கு ஏற்கனவே பல ஆதரவுகள் கிளம்பி வருகின்றன. பாலாஜி வெளியே போக வாய்ப்பு இல்லை. ஏனெனில் கன்டென்ட் கொடுப்பவர் அவர் தானே.

அனிதா கொஞ்சநஞ்ச வாய்ப்புள்ளது. ரியோவிற்கு ஏற்கனவே அதிக ரசிகர்கள் உள்ள நிலையில் அவரும் வெளியேற வாய்ப்பில்லை. அதிகபட்சமாக சுசித்ரா வெளியேற தான் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அவரை தான் மக்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். வந்த 1 வாரத்திலேயே பல கலாட்டாக்களை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்தார். இந்நிலையில் அவர் தான் வெளியேறுவார் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here