பிக் பாஸ் சீசன் 4 தொடங்கிய நாளிலேயே பல சண்டைகளுடன் களைகட்டி உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்களின் கதைகளை கூறி நான் பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதியானவர் தான் என நிரூபிக்க வேண்டும் என்று கூறி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் ரம்யா பாண்டியன் தான் எதற்கு பிக் பாஸ் வீட்டிற்கு வந்தேன் என்ற கதையை கூறியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 4
பிக் பாஸ் தற்போது சக போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுத்துள்ளார். அதாவது அவர்களது வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை கூறி தான் இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதியானவர் தான் என்பதை நிரூபிக்க வேண்டும். இதனால் கடந்த வாரம் முழுக்க பலரும் அவர்கள் கடந்து வந்த பாதையை பற்றி கூறி வந்தனர்.
நிஷாவின் வாழ்க்கையில் நடந்தவை அனைவர்க்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. மேலும் நமது வாழ்க்கையில் சாதிப்பதற்கான ஒரு தூண்டுகோலாக இருந்தது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஆஜித், பாலாஜி, ரம்யா பாண்டியன் ஆகியோர் தங்களை பற்றி கூறினர். இதில் பாலாஜியின் வாழ்கை கதை மிகவும் சோகங்கள் நிறைந்ததாகவும், தானாக முன்னேறி வந்திருப்பதும் தெரிந்தது.
இதனால் பலரும் கண்கலங்கினர். பின்னர் ரம்யா பாண்டியன் தனது வாழ்க்கையில் நடந்த கதையை கூறியிருந்தார். அவர் நடித்த ஜோக்கர் திரைப்படம் அவருக்கு எந்த புகழையும் தரவில்லை என்று கூறியிருந்தார். அதன் பிறகு அவரது அப்பாவின் மரணத்தை பற்றியும் கூறியிருந்தார்.
பாம்பு கடித்து இறந்ததாகவும் கூறியிந்தார். மேலும் குடும்ப கஷ்டத்தின் காரணமாக அவர் சத்தியம் தியேட்டர் வாசலில் நோட்டீஸ் கொடுக்கும் வேலைக்கு சென்றேன் என்றும் கூறினார். அதன் பிறகு ஒரு டைரக்டர் என்னை பார்த்து நீங்க படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டார். ஆனால் வீட்டில் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.
அதன் பிறகு சம்மதிக்க வைத்து நிறைய படங்கள் நடித்தேன். ஆனால் எதிலும் தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறினார். மேலும் ‘குக் வித் கோமாளி’ மூலமே தனக்கு இவ்வளவு வரவேற்பும் அங்கீகாரமும் கிடைத்தது என்று கூறியுள்ளார். இந்நிலையில் நாமினேஷனில் ரம்யா பாண்டியனும் இடம் பெற்றுள்ளார். ஏனெனில் அவரது கதையில் யாருக்கும் சோகமும், கண்ணீரும் வரவில்லை என்று கூறி நாமினேட் செய்துள்ளனர்.