விஜய் டிவியை தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் தூக்கி விட்டுள்ளது என்னவோ பிக் பாஸ் சீசன் 4 தான். ஏனெனில் லாக்டவுன் சமயத்தில் விஜய் டிவியில் சீரியல் எதுவும் ஓடாததால் சற்று மந்த நிலைமையிலேயே போனது. தற்போது பிக் பாஸ் ஆரம்பித்து 50 வது நாளை நெருங்கி வருகிறது. மேலும் இந்த மணிக்கூண்டு டாஸ்க்கும் முடிவடைந்துள்ளது.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பல பரபரப்பான டாஸ்குகள் ஓடிக்கொண்டிருந்தது. மழை, வெயில் என பாராது போட்டியாளர்கள் தங்களது முழு ஈடுபாடுகளை கொடுத்து விளையாடி வந்தனர். நேற்று கூட பாலாவால் பிரச்சனைகள் ஏற்பட்டது. மணிக்கூண்டில் நிற்பதற்காக பாலாவை எழுப்ப அவர் எந்திரிக்கவில்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால் டாஸ்க் முடிந்ததுமே எழுந்து வந்தார். இதனால் போட்டியாளர்கள் இடையே சில பிரச்சனைகளும் ஏற்பட்டது. தற்போது விஜய் டிவி ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அதாவது வெற்றிகரமாக போட்டியாளர்கள் தங்களின் மணிக்கூண்டு டாஸ்கை முடித்துள்ளனர். ஆனால் எந்த டீம் வெற்றி பெறுகிறது என்று பதட்டத்தில் அமர்ந்துள்ளனர்.
பிக் பாஸ் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. ஆனால் எந்த டீம் வெற்றி பெற்றது என்று இன்னும் காட்டவில்லை. அடுத்ததாக மற்றொரு ப்ரோமோவும் வெளியானது. அதில் சம்யுக்தா, ரம்யா பாண்டியன் மற்றும் ஆஜித் அமர்ந்து பேசிக்கொண்டுள்ளனர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதில் ரம்யா யாரை நாமினேட் செய்வாய் என ஆஜித் இடம் கேட்க அவரோ ஷிவானி, சுசித்ராவை கூறுகிறார். மேலும் ரம்யா, ஷிவானியை டாஸ்கில் எந்த ஈடுபாடும் அவளுக்கு இல்லை என்றும் கூறுகிறார்.
அதன் பிறகு பாலாவை சந்தோசப்படுத்துற ஒரே ஆளு ஷிவானி மட்டும் தான். பாலா மாமா, பாலா மாமானு சுத்துறதுக்கு பதிலா டாஸ்குலயும் உங்க கவனத்தை செலுத்துனா நல்லா இருக்கும் என்று கிண்டல் செய்து கூறுகிறார். மேலும் ஷிவானி போலவே கையை கட்டி நான் என்ன செய்யல சொல்லுங்க பாப்போம் என்று கூறி பங்கமாக கலாய்த்துள்ளார் ரம்யா.