பிக்பாஸுக்கு பிறகும் அர்ச்சனாவை தாக்கிய மாயா?? வைரலாகும் இன்ஸ்டா பதிவு உள்ளே!!

0
பிக்பாஸுக்கு பிறகும் அர்ச்சனாவை தாக்கிய மாயா?? வைரலாகும் இன்ஸ்டா பதிவு உள்ளே!!
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அண்மையில் முடிவுக்கு வந்தது. இதில் டைட்டில் வின்னராக அர்ச்சனாவும் முதல் ரன்னராக மணி மற்றும் இரண்டாம் ரன்னராக மாயா வெற்றி பெற்றிருந்தனர். இதையடுத்து  டைட்டில் வின்னர் அர்ச்சனா & மாயா ரசிகர்களுக்கு இடையே சோசியல் மீடியாவில் மோதல்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது மாயா தான் டைட்டிலை வெல்ல தகுதியானவர் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மாயா தன் ரசிகர்களுக்காக பதிவு ஒன்றே வெளியிட்டுள்ளார்.
அதில், ”உங்களுடைய அளவு கடந்த அன்பு மழையில் என்னை நனைய வைத்துவிட்டீர்கள். என்னுடைய மரியாதை மற்றும் அளவற்ற அன்பும் உங்களுக்காக எப்பொழுதும் இருக்கும் இனி உங்களுக்காக தான் வேலை பார்க்கப் போகிறேன் எல்லாமே உங்களுக்காக தான். நீங்கள் எப்பொழுதும் எனக்காக இருப்பீர்கள் என நம்புகிறேன். மேலும் எனக்கு ஒரே ஒரு ஆசை இருக்கிறது என்னை வெறுப்பவர்களாக இருந்தாலும் கூட அவர்களை நீங்கள் வெறுக்க வேண்டாம். போற்றுபவர் போற்றட்டும் தூற்றுபவர் தூற்றட்டும் போய் நம்ம வேலையை பார்க்கலாம். இப்படிக்கு அன்புடன் மாயா” என குறிப்பிட்டுள்ளார். டைட்டில் வின்னர் அர்ச்சனா மற்றும் அவரது ஆதரவாளர்களை மனசில் வைத்து தான் இப்படி ஒரு இந்தபதிவை இவர் போட்டு உள்ளாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here